எதிர்வரும் காலத்தில் அரிசியின் விலை மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்து இருப்பு வைக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் வருடத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகள் அரிசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபையின் வசம் நெல் அல்லது அரிசி கையிருப்பு இல்லாததால் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.