follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP1ஈஸ்டர் வழக்கின் உண்மைகளை மறுபரிசீலனை செய்ய மைத்திரி கோரிக்கை

ஈஸ்டர் வழக்கின் உண்மைகளை மறுபரிசீலனை செய்ய மைத்திரி கோரிக்கை

Published on

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையிலான குழு, ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணி ஹர்ஷ ஏ. ஜே சோசா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கு சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என முன்னாள் சட்டமா அதிபர் ஒருவரும் குற்றஞ்சாட்டி அறிக்கை விடுத்துள்ளதால், எரியும் நெருப்பில் வைக்கோல் போடுவது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த குழப்பமான அறிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...