கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால் வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.