follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP1கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு

கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு

Published on

அஸ்வசும அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குரிய பணிகளில் இருந்து விலகியிருக்கும் போது, பலவந்தமாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்தால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை கிராம சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால் கூறுகையில், மற்ற அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய, தங்கள் சங்கத்தின் அதிகாரிகள் கட்டுப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

அஸ்வசும அபிவிருத்தித் திட்டத்தின் கடமைகளுக்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இவ்வாறான அழுத்தங்கள் தொடருமானால், தனது வழமையான கடமைகளில் இருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை கிராம சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால் தெரிவித்தார்.

“அஸ்வசும வேலைத்திட்டம் என்பது சமூர்த்தி வேலைத்திட்டமே. சமுர்த்தி வேலைத்திட்டத்தை செய்வதற்கு 1994 ஆம் ஆண்டு முதல் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த அதிகாரியின் பணியை இந்த கிராம உத்தியோகத்தர் மீது திணிக்க முயற்சிக்கின்றது.

மற்ற அதிகாரிகளின் கடமைகளை செய்ய நாங்கள் கட்டுப்படவில்லை என்று கூறுகிறோம். சமுர்த்தி உத்தியோகத்தர் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுத்து வெளியேறும் போது, ​​அவர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதில்லை…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child...

“கிளீன் ஸ்ரீலங்கா” வின் கீழ் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை...