ரயில் சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் அலுவலக மற்றும் தபால் உள்ளிட்ட 37 ரயில் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் 18 சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 12 சேவைகளும் புத்தளம் ரயில் மார்க்கத்தில் 4 சேவைகளையும், களனிவெளி மார்க்கத்தில் 3 ரயில் சேவைகளையும் முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.