follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP1கோட்டைக்கும் மருதானைக்கும் இராணுவப் பாதுகாப்பு

கோட்டைக்கும் மருதானைக்கும் இராணுவப் பாதுகாப்பு

Published on

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேவைப்பட்டால் ஏனைய புகையிரத நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்கள துணைப் பொது மேலாளர் என்.ஜே. இந்திபோலகே குறிப்பிட்டார்.

புகையிரதத்தை இயக்குவதற்கு ஒன்றிணைந்த புகையிரத சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பினால் ஏற்படக்கூடிய சிக்கல் நிலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...