follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1சசித்ர சேனாநாயக்க இன்று இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில்

சசித்ர சேனாநாயக்க இன்று இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில்

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (13) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபரான சசித்ர சேனாநாயக்கவை இன்று காலை 9.00 மணிக்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் அழைத்து வந்து குரல் பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் கடந்த 6ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சசித்ர சேனாநாயக்க அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்காக தம்மிக்க பிரசாத் மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய இரு வீரர்களை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு குற்றத் தடுப்பு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்னும் கொஞ்ச நாளில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள்...

கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக...

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை – துப்பாக்கிதாரி தடுப்புக்காவலில்

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...