follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1இந்த வாரம் த்ரிபோஷ பிரச்சினைக்கு தீர்வு

இந்த வாரம் த்ரிபோஷ பிரச்சினைக்கு தீர்வு

Published on

06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கான மூன்று போஷாக்கு மேலதிக உணவு விநியோகம் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவியதோடு, த்ரிபோஷ மீள் விநியோகம் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுமார் ஒரு வருட காலமாக குழந்தைகளுக்கு திரிபோஷ விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எனவே, திரிபோஷ விநியோகத்தை விரைவில் தொடங்குமாறு அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள்

பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது...

இன்று திட்டமிட்டபடி சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சம்பளப் பிரச்சினை...