follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP12022ல் பொருளாதார நெருக்கடியால் 192 தற்கொலைகள்

2022ல் பொருளாதார நெருக்கடியால் 192 தற்கொலைகள்

Published on

கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் 2832 பேர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது. இது 83% ஆகும். பொருளாதாரச் சிக்கல்களால், 2022ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 192 ஆக உள்ளது. இது 5.06% ஆகக் காட்டப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக 593 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது 17.04% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 274 பேர் போதைக்கு அடிமையானவர்கள் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 8% ஆகும். மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 412 பேர் தற்கொலை செய்து கொண்டனர், இது 12% ஆகும்.

2023ஆம் ஆண்டு தொடர்பான தற்கொலைத் தரவுகளை சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை சுகாதார அமைச்சினால் பெறமுடியவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளை சேகரிக்க நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உதவியதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள்,...

“Clean Sri Lanka” வேலைத்திட்டம் – வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கார் மற்றும் ஒரு நூலகம்..- அமைச்சர் செனவி..

ஒவ்வொரு குடும்பமும் ஒரு காரையும் நூலகத்தையும் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கும் என்று அமைச்சர்...