follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1உலகையே உலுக்கிய செப்.11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள்

உலகையே உலுக்கிய செப்.11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள்

Published on

மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகின் பல நாடுகளின் தலைவிதியே மாறிவிட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று அமெரிக்கா முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்தவர்களை நினைவு கூர்வதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அவரது மனைவியும் கலந்து கொள்கின்றனர்.

இந்தத் தொடர் தாக்குதல்கள் செப்டம்பர் 11, 2001 அன்று 19 அல்-கொய்தா தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது.

04 குழுக்களாக பிரிந்த பயங்கரவாதிகள் 04 அமெரிக்க பயணிகள் விமானங்களை கடத்தியுள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலும் விமானத்தை கையாள்வதில் நன்கு பயிற்சி பெற்ற ஒரு தீவிரவாதி இருந்ததாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையக் கோபுரங்கள் மீதும் மற்றொன்று பென்டகனின் மேற்குப் பகுதியிலும் விழுந்து நொறுங்கியது.

மற்றைய விமானம் பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கி பின்னர் வெள்ளை மாளிகை அல்லது வாஷிங்டன் டி.சி.யை தாக்க வந்ததாக கூறப்படுகிறது.

தொடர் தாக்குதல்களில் வெளிநாட்டினர் உட்பட 2,996 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25,000 பேர் காயமடைந்துள்ளனர். 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டிருந்தது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அல்கொய்தா மற்றும் அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை தண்டிக்க அமெரிக்கா 2001ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

அது, தலிபான் ஆட்சியை உடைத்தது. இதன் விளைவாக, ஒசாமா பின்லேடன் 2011 இல் கொல்லப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டான பகுதிக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு...

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...