நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை(01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக ஒரு மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வாரந்தோறும் 400,000 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.