‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று முதன்முறையாக கூடுகிறது.
13 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இன்றைய கலந்துரையாடலின் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.