follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்இங்கிலாந்தில் 7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற தாதி

இங்கிலாந்தில் 7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற தாதி

Published on

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் பிறந்த குழந்தை பிரிவில் ஏழு புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொன்றது மற்றும் மேலும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்ற வழக்கில் தாதி ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லூசி லெட்பி என்ற 33 வயதான தாதி, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், கவுண்டஸ் ஒஃப் செஸ்டர் மருத்துவமனையில் ஐந்து ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் கொன்றது மற்றும் 6 குழந்தைகளைத் தாக்கி கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் 10 மாத விசாரணையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், லெட்பியை பிரிட்டனின் மிகச் சிறந்த தொடர் குழந்தை கொலையாளிகளில் ஒருவராக இருந்துள்ளார்.

நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போலியோ பாதிப்பில் குழந்தைகள் : கருணை காட்டாத இஸ்ரேல்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போர் காரணமாக காசாவில் குழந்தைகள் போலியோ பாதிப்பு அச்சத்தில் இருக்கின்றனர்....

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...