ரயில் பயணிகளுக்கான பருவகால சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற வரையறை தொடர்பிலான இறுதி திர்மானம் மீள்பரிசீலிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை தொடர்பிலான தீர்மானம் நாளை கூடவுள்ள கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு தற்போது மாகாண எல்லைக்குட்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றன.
மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத சேவை, பருவகால அட்டைக்கு அமைய புகையிரத சேவையை பயன்படுத்தும் மட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று கூடவுள்ள ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.