follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன - சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன – சரத் வீரசேகர

Published on

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.

மேற்படி விசாரணை தொடர்பில் பொலிஸாரின் சகல கடமைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் பொலிஸார் முடித்துள்ளதோடு, சட்டமா அதிபரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தாக்குதல்கள் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் தற்போது விசாரிக்கப்படுகின்றன,’ என்று அவர் கூறினார்.

சுமார் இரண்டரை வருடங்களில் மிகக் குறுகிய காலப்பகுதியில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் எனவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என எவராலும் குற்றம் சுமத்த முடியாது எனவும் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

‘மிகக் குறுகிய காலத்தில் சுமார் 110,000 தொலைபேசி அழைப்புகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 தரப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமார் 23,700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...