follow the truth

follow the truth

September, 23, 2024
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன - சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன – சரத் வீரசேகர

Published on

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.

மேற்படி விசாரணை தொடர்பில் பொலிஸாரின் சகல கடமைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் பொலிஸார் முடித்துள்ளதோடு, சட்டமா அதிபரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தாக்குதல்கள் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் தற்போது விசாரிக்கப்படுகின்றன,’ என்று அவர் கூறினார்.

சுமார் இரண்டரை வருடங்களில் மிகக் குறுகிய காலப்பகுதியில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் எனவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என எவராலும் குற்றம் சுமத்த முடியாது எனவும் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

‘மிகக் குறுகிய காலத்தில் சுமார் 110,000 தொலைபேசி அழைப்புகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 தரப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமார் 23,700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர்...