follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுமுல்லேரியா கொலை - சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.25 இலட்சம்

முல்லேரியா கொலை – சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.25 இலட்சம்

Published on

முல்லேரியா – மீகஹவத்தையில் வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று(27) அறிவித்துள்ளது.

மீகஹவத்தையில் பொலிஸ் சீருடை அணிந்திருந்த இனந்தெரியாத நபரால் நேற்றைய தினம் (26) வீடொன்றுக்குள் புகுந்த இருவர் அங்கிருந்தோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், பிரதான சந்தேக நபர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸ் திணைக்களம் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பொன்னம்பெரும ஆராச்சிகே தொன் தனுஷ் புத்திக நொஹான் ஜிலே என்ற பெயருடைய 30 வயதான நபர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் 071 859 1727, 077 7370360, 071 8592279 ஆகிய இலக்கங்களுடன் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளர், மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...