follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

Published on

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கும், வெளியே செல்வதற்கும் கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...