follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசாந்த பண்டாரவுக்கு பொஹட்டுவயில் இருந்து புதிய பட்டம்

சாந்த பண்டாரவுக்கு பொஹட்டுவயில் இருந்து புதிய பட்டம்

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பொஹொட்டுவவில் இணைந்து கொண்ட ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தொகுதியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து அவர் அண்மையில் நியமனக் கடிதத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐந்தாம் திகதி பிங்கிரிய பொஹொட்டு ஆசன சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் தொகுதியின் பணிகளை உத்தியோகபூர்வமாக முன்னெடுப்பதாக பிங்கிரிய கரவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிங்கிரிய பிரதேச சபையிலும் உடுபத்தாவ பிரதேச சபையிலும் அமைச்சரின் பொது தினம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், முன்னாள் பிரதி அமைச்சர் முனிதாச பிரேமச்சந்திரவின் சகோதரரும், வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தலைவருமான சோமசிறி குணதிலக்க, பிங்கிரிய தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...