சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெட்ரோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.