கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யாவிடின் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் எச்சரித்துள்ளார்.
“இந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்யாது. எனவே, இரண்டு நாட்களுக்கு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் வேலைநிறுத்தம் செய்வோம், நாடு இருளில் மூழ்கும்” என்று ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்