follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுசீன சேதனப் பசளையை மீளாய்விற்கு உட்படுத்த இணக்கம்

சீன சேதனப் பசளையை மீளாய்விற்கு உட்படுத்த இணக்கம்

Published on

சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமொன்றுக்கு அனுப்பி மீள ஆய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.

இன்று (26) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஆய்வுக்கூடங்களில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன நிறுவனம் தெரிவித்துள்ளதாக சஷீந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

எனினும், அவர்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் வேண்டுகோளாகவே அதனை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

இரண்டு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இடத்தில் உரத்தின் தரம் தொடர்பாக பரிசோதனை நடத்தலாம் என யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...