follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகொவிட் மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு?

கொவிட் மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு?

Published on

கடந்த 8 முதல் 9 நாட்களாக தினசரி கொவிட் மரணங்கள் 20 க்கும் கீழே பதிவாகி இருந்த நிலையில், நாட்டில் நேற்று 29 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே அதிக உயிரிழப்புக்கு காரணமா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பதிவான கொவிட் மரணங்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த சில தினங்களாக இறப்புகள் சற்று அதிகரித்து வருகின்றமை சுகாதார அதிகாரிகளிடையே சில கவலைகளை எழுப்பியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான...

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...