follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை

Published on

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு நாளை (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களையும் இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இந்த சர்வகட்சி கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானத்தினை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...