follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1இனிமேல் போர்ட் சிட்டி பீச் க்கு வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்

இனிமேல் போர்ட் சிட்டி பீச் க்கு வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்

Published on

கொழும்பு போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பார்வையாளர்களுக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று குதூகலமாக அங்குள்ள வளங்களை அனுபவித்தனர்.

இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இரம்யமான கடற்கரை மற்றும் அதில் உள்ள விளையாட்டுக்கள், மற்றும் உணவகங்களை பார்வையிடவே மக்கள் வரிசையாக செல்கின்றனர்.

ஆனால் இந்த கடற்கரை திறந்துவைக்கப்பட்ட முதல் நாளில் மோட்டார் சைக்கிள், மற்றும் த்ரீவீல் என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலி முகத்திடல் ஆரம்பத்தில் இருந்து குறித்த கடற்கரைக்கு செல்ல 5 கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டியுள்ளது. அதனாலயே இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால த்ரீவீல் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த இடத்தை நாசமாக்கி விட்டு சென்றுள்ளதால் இனிமேல் த்ரீவீல், பைக், அல்லது நடந்து செல்லவோ அனுமதி வழங்கப்படமாட்டாது என அங்குள்ள பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

எனவே இனிமேல் போர்ட் சிட்டி பீச் க்கு போவதாக இருந்தால் வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...