கடந்த தசாப்தத்தில் இலங்கையில் அதிகளவான காட்டு யானை மரணங்கள் 2022 இல் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 463 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக அதன் தேசிய இணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்திருந்தார்.
காட்டு யானைகளின் மரணங்களில் பெரும்பாலானவை மனித நடவடிக்கைகளினால் ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுயானைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால் சுற்றுலாத்துறை மாத்திரமன்றி நாட்டில் ஒரு காட்டுயானை கூட மிஞ்சியிருக்காது என கலாநிதி ரவீந்திர காரியவசம் சுட்டிக்காட்டியிருந்தார்.