பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான சுங்க விசாரணை அறிக்கையை சபாநாயகர் இன்று (18) சமர்ப்பிக்க உள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 30 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சபாநாயகரிடம் தீர்மானம் ஒன்றை கையளித்துள்ளனர்.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பை அழைப்பதில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியதா என்பதை கண்டறிய விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்கும் யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.