G20 பொதுப் பொறிமுறையில் உள்ளடக்கப்படாத போதிலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் முன்னேற்றமடைந்து தொடர்ந்து இயங்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில், அதன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கோசாக், இந்த செயல்முறையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையின் போது கடனாளி நாடுகளுக்கு சில நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில், பொதுவான பொறிமுறைக்கு புறம்பாக செயற்படும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.