follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1தடுப்பூசி போடப்பட்ட மற்றுமொரு இளம் பெண் உயிரிழப்பு

தடுப்பூசி போடப்பட்ட மற்றுமொரு இளம் பெண் உயிரிழப்பு

Published on

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சமோதி சந்தீபனி அண்மையில் கொட்டலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சையின் போது அவருக்கு போடப்பட்ட ஊசி மூலம் உடல்நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சமோதியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

“எனது குழந்தைக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சாந்தோம். முதலில் கொட்டலிகொடைக்கு அழைத்து சென்றோம். பின்னர் 10ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து வந்தோம். அதன் பின்னர் எனது மகள் ஐ.சி.யூவில் இருந்து மேலே 17ஆம் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுமார் 3.30 மணியளவில் எனது மகளுக்கு கெனியூலா வழங்கப்பட்டு செலேன் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இரண்டு மருந்துகளை ஊசி போட்டவுடனே என் குழந்தையின் கண்ணில் ஏதோ நேர்ந்தது, ஏதோ நடக்கப் போகிறது என்று என் மகள் கூறினாள். அதன் பிறகு, என் மகள் குளியலறைக்கு சென்றாள்.

பிள்ளை சிங்கில் தலையை வைத்திருந்தாள். உடல் முழுக்க நீலமாக மாறியது, கைகால்கள் நீலமாக மாறியது, என் குழந்தை சரிந்தது. தாதியர்கள் வந்து என் குழந்தையை வார்டுக்குக் கொண்டு வந்தனர். இன்று என் மகள் இல்லை. எனக்கு ஒரே ஒரு பிள்ளை. என் குழந்தைக்கு வேறு எந்த நோயும் இல்லை…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...