follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுஅடுத்த வருடம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

Published on

அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (25) கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில், இடம்பெற்ற LANKAQR இன் நாடு தழுவிய வெளியீட்டு நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

LANKAQR ஆனது, அனைத்து QR குறியீடுகள் மற்றும் QR அடிப்படையில் இலங்கையில் மேற்கொள்ளக் கூடிய பரிவர்த்தனைகள், உரிய தரத்தின் கீழ் மேற்கொள்வதனை, இலங்கை மத்திய வங்கி ஒருங்கிணைத்து உறுதிசெய்வதற்கான திட்டமாகும்.

டிஜிட்டல் பணம் அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது இவை அனைத்துக்கும் முன்னர், பணத்தை பயன்படுத்தாத பொருளாதாரத்தை நோக்கி செல்ல தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள் (20மிகி/2மிலி) இந்திய உயர்...

மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின்...

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....