follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1தேஷபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கடும் எதிர்ப்பாம்

தேஷபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கடும் எதிர்ப்பாம்

Published on

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்படாததால், சி.டி.விக்ரமசிங்கவுக்கு அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதில் தமக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி கடுமையாக கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூன் 25ம் திகதி, சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் முடிவடைந்து, பொலிஸ் மா அதிபர் பதவி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு வெற்றிடமாகவே இருந்தது.

புதிய பொலிஸ் மா அதிபராக அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி இதுவரை எந்த பெயரையும் முன்மொழியவில்லை என்ற நிலையில் சி.டி. விக்கிரமரத்னவை தொடர்ந்தும் சேவையில் இருக்கும் வகையில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...