தூண்களில் இயங்கும் கொழும்பு துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின் 70 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சிய நிர்மாணப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தூண்களின் ஆதாரத்துடன் இயங்கும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை அவதானித்த பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.