follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1மேலும் இரண்டு தாய்லாந்து யானைகள் குறித்து கவனம்

மேலும் இரண்டு தாய்லாந்து யானைகள் குறித்து கவனம்

Published on

தாய்லாந்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் முத்துராஜா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யானையை மீட்டுத் தருமாறு நாட்டின் தேரர் ஒருவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அந்நாட்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

நோய்வாய்ப்பட்ட யானைக்கு மேல் சிகிச்சை அந்நாட்டு அரசினால் அளிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...