follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1மலையகப் பாதையில் ரயில் சேவையில் பாதிப்பு

மலையகப் பாதையில் ரயில் சேவையில் பாதிப்பு

Published on

வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு தபால் புகையிரதத்தின் இயந்திரம் புகையிரத பாதையில் மரமொன்று வீழ்ந்ததன் காரணமாக தடம் புரண்டதாக அதன் துணை நிர்வாகி எம்.ஜே.இதிபோலகே குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மலையக வீதியின் ரயில் சேவை கொட்டகலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக எம். ஜே.இதிபோலகே குறிப்பிட்டார்.

இதேவேளை, கும்புருகமுவ மற்றும் வெலிகமவிற்கு இடையில் புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கரையோரப் பாதையில் பயணிக்கும் பல ரயில்கள் தாமதமாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...