follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP1அபேக்ஷா வைத்தியசாலையில் பெட் ஸ்கேன் பரிசோதனைகள் நிறுத்தம்

அபேக்ஷா வைத்தியசாலையில் பெட் ஸ்கேன் பரிசோதனைகள் நிறுத்தம்

Published on

பெட் ஸ்கேன் பரிசோதனையின் போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் கதிரியக்க தடுப்பூசி கிடைக்காததால், புற்றுநோயாளிகளுக்கு நடத்தப்படும் பெட் ஸ்கேன் பரிசோதனை ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பெட் ஸ்கேன் செய்வதற்கு முன், FDG எனப்படும் இந்த கதிரியக்க தடுப்பூசி நோயாளிக்கு கொடுக்கப்பட்டு அதன் பிறகு ஸ்கேன் செய்யப்படுகிறது.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 26ஆம் திகதி முதல் பெட் ஸ்கேன் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பெட் ஸ்கேன் என்பது ஒரு நோயாளியின் புற்றுநோய் நிலையின் வளர்ச்சி, இருப்பிடம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறியும் நவீன பரிசோதனையாகும், அத்துடன் புற்றுநோய் நோயாளியின் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வளர்கிறதா இல்லையா என்பதைச் சரியாகக் கண்டறியும் திறன் கொண்டது.

கதிரியக்க தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் சரியான நேரத்தில் தடுப்பூசி சப்ளை செய்ய டெண்டர்கள் கோரப்படாததே காரணம் என்றும் அரசின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து மருந்துகள் வழங்கப்படுவதற்கு, சரியான நேரத்தில் டெண்டர் கோரப்பட்டு, தற்போதுள்ள சப்ளை நிறுத்தப்படுவதற்கு முன், புதிய டெண்டருக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த புதிய டெண்டர் அழைப்பில், பெட் ஸ்கேன் செய்யும் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் யாரும் மருத்துவமனையின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் ஈடுபடவில்லை என்றும் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது அரசாங்க வைத்தியசாலையில் இரண்டு பெட் ஸ்கேன் இயந்திரங்கள் மாத்திரமே உள்ளதுடன் மற்றைய இயந்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஒரு இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு பத்து நோயாளிகளை மட்டுமே பரிசோதிக்க முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...