அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட செலவழிக்கப்படாத நிதியை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியில் இருந்து தேவையான நிதி விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.