follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP1அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் விசேட தீர்மானம்

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் விசேட தீர்மானம்

Published on

அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட செலவழிக்கப்படாத நிதியை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியில் இருந்து தேவையான நிதி விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...