follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுடெல்டாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது டெல்டா பிளஸ் பிறழ்வு

டெல்டாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது டெல்டா பிளஸ் பிறழ்வு

Published on

கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த புதிய துணை பிறழ்வு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கூறினார்.

டெல்டா பிறழ்வை விட டெல்டா பிளஸ் பிறழ்வு 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு டெல்டா அல்லது டெல்டா பிளஸ் பிறழ்வு தொற்றாது என ஆய்வுகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சடுதியாக உருவாகக்கூடிய புதிய பிறழ்வுகளினூடாக துணை பிறழ்வுகளும் உருவாகக்கூடும் என விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் டெல்டா பிளஸ் இலங்கையில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதை தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...