follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP2ஆகஸ்ட் முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

ஆகஸ்ட் முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

Published on

போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்திய 41 பேரை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காண முடிந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸார் அண்மையில் மேல் மாகாணத்தில் முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் 19 பேர் பஸ் சாரதிகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் எனவும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காணும் சோதனைக் கருவிகளும் நாடளாவிய ரீதியில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...