follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1ஆளும் கட்சியின் அமைச்சர்களை கொழும்பில் தங்குமாறு அறிவிப்பு

ஆளும் கட்சியின் அமைச்சர்களை கொழும்பில் தங்குமாறு அறிவிப்பு

Published on

எதிர்வரும் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் நீண்ட வார இறுதியில் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் ஜனாதிபதி செயலகத்தினால் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்படலாம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வார இறுதியில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹித அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சி.பி.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட அமைச்சர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்களின் பதவிகள் மாறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் கேட்ட போது, ​​தனக்கும் இவ்வாறான செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் அது தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...