இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்கள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட குழு இன்று (20) முதன்முறையாக கூடவுள்ளது.
இந்த குழு இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
Express Pearl மற்றும் New Diamond கப்பல் விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அந்த கோரிக்கையின் பிரகாரம் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏற்பாடு செய்தார்.