ஹொரணை – கொழும்பு வீதியில் கொஹூவல சந்தியில், இன்று முதல் பொது போக்குவரத்து பஸ்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொஹூவல மேம்பால நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதினால், இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை குறித்த வீதி ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.