follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுரிஷாட்டின் மேன்முறையீட்டு மனு அடுத்த வருடம் விசாரணைக்கு

ரிஷாட்டின் மேன்முறையீட்டு மனு அடுத்த வருடம் விசாரணைக்கு

Published on

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை அடுத்த வருட பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

வில்பத்து வனப்பகுதியை அண்மித்த பிரதேசங்களிலுள்ள கல்லாறு காட்டுப்பகுதியில் தேவையற்ற ரீதியில் நிர்மாணங்களை மேற்கொண்டதாக அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள உத்தரவை நீக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வில்பத்து வனப்பகுதியை அண்மித்த கல்லாறு மற்றும் மரிச்சுக்கட்டி ஆகிய வனப்பகுதிகளில் தேவையின்றி கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டமைக்கு எதிராக சுற்றுச் சூழல் நீதி மையத்தினால் கடந்த 2015ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...