எதிர்காலத்தில் எவ்விதத்திலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.
24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பிலேயே ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.