வார இறுதியில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக நேர செலவுகளை குறைக்கும் வகையில் கடந்த 4 மாதங்களாக பொது விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
எரிபொருளின் விலை குறையும் என எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் ஆர்டர் செய்யாததாலும் குறைந்தபட்ச இருப்புக்களை பேணாததாலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.