follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1'புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது - மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை...

‘புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது – மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை என்ன செய்வது?’

Published on

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

‘பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது?
முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் என எரித்த ஞானசாரவின் செயலை விடவா நடஷாவின் வார்த்தைகள் மோசமானது?

மேலும், டாக்டர் ஷாபியின் வாழ்க்கையை அழித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சூழ்ச்சியாக செய்து நாடு முழுவதும் பரப்பி ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்களை பற்றி என்ன சொல்வது ?
குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க இன்னும் நேரமுண்டு, ஜனாதிபதி விக்கிரமசிங்க அதை செய்ய வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்கும்!’ எனத் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...