follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது

எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது

Published on

டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், எனவே உதிரி பாகங்கள் மற்றும் டயர்களின் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பேட்டரி ஒன்றின் விலை 35,000 ரூபாவிலிருந்து 80,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், டயரின் விலை 1 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

ஒரு டயர் நிரப்புவதற்கு 25,000 ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாகவும், சில உதிரி பாகங்களின் விலை 500% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் பேரூந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பேரூந்து வருமானம் குறைந்ததாகவும், ஆனால் பேரூந்துகளின் பராமரிப்புக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேரூந்து கட்டணத்தை திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பேரூந்து உதிரி பாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை”

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என...

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - கஹவத்த...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...