follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுநாளை பாடசாலைகள் மீள ஆரம்பம் - கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

Published on

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை நாளை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குரிய தீர்வை முன்வைத்துள்ளதாகக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலம் பெற்றோரின் மகிழ்ச்சி மாத்திரமல்ல, நாட்டு மக்கள் அனைவரும் சந்தோசாத்திலுள்ளனா். அந்த மகிழ்ச்சியுடன் இலட்சக்கணக்கான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் நாளையிலிருந்து மீண்டும் ஆரம்பமாகின்றன.

மாணவர்களுக்கான சுதந்திரக் கல்விக்காக இருக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, சுதந்திரக் கல்விக்கான உரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக சகலரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...