ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் யுகதனவி மின்நிலையம் தொடர்பில் கோரிய கலந்துரையாடலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹோமாகம – கொடகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.