கொழும்பு-ஹொரணை பிரதான வீதியின் கொஹுவளை சந்தி பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொஹுவளை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக, நாளை மறுதினம்(21) முதல் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இந்தப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் மாற்று வீதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.