தேயிலை துறையின் பயன்பாட்டிற்கான அமோ னியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார் .
உரப்பிரச்சினை தொடர்பில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாட்டின் தேயிலையின் தரம் மற்றும் உற்பத்தி என்பன வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காகத் தேயிலை துறையின் பயன்பாட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அமோனியம் சல்பேட்டு உரத் தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
போதுமான அளவு சேதன உரம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வரையில் குறித்த உரம் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார் .