follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP1நாடு திரும்பியதும் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவார்

நாடு திரும்பியதும் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவார்

Published on

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மே 14 ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இருக்க, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பவுள்ளதாக ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் முன்னர் பயன்படுத்திய அத்தியாவசிய தொழில் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெரோம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ போதகர் ஆற்றிய பிரசங்கம் சமூக ஊடகங்களில் பரவியது, அந்த அறிக்கைகளில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் புத்தர் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போதகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர்.

அத்துடன், போதகரின் வாக்குமூலங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாட்டை விட்டுச் சென்றிருந்தார்.

எவ்வாறாயினும், ஜெரோம் பெர்னாண்டோவை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் நேற்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தடை உத்தரவைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான உண்மைகளை கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சமர்பித்ததன் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாங்கொக்கில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில்...

மீரிகம – கடவத்தை பகுதியின் நிர்மாணப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின்...

அஸ்வெசும காத்திருப்புப் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கு 50% தள்ளுபடி விலையில் உணவுப்பொதி

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்...